சட்டசபையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் - அமைச்சர் துரைமுருகன் கேள்விக்கு ஈ.பி.எஸ். பதில்


சட்டசபையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் - அமைச்சர் துரைமுருகன் கேள்விக்கு ஈ.பி.எஸ். பதில்
x

அ.தி.மு.க. உறுப்பினர் தங்கமணி பேசும்போது தி.மு.க. உறுப்பினர்கள் குறுக்கீடு செய்யவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சென்னை,

சட்டசபையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினர் தங்கமணி பேசினார். அவர் பேசியதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் எழுந்து பேசுகையில், அ.தி.மு.க. உறுப்பினர் தங்கமணி பேசும்போது தி.மு.க. உறுப்பினர்கள் ஒரு முறை கூட குறுக்கீடு செய்யவில்லை என்று கூறினார்.

பேச்சுக்கு பேச்சு பதில் கொடுக்கும் திறன் வாய்ந்த தங்கம் தென்னரசு கூட எதிர்கட்சி உறுப்பினர் பேசட்டும் என்று நாகரீகமாக நடந்து கொண்டார் என்று குறிப்பிட்ட அமைச்சர் துரைமுருகன், அ.தி.மு.க. ஆட்சியில் இப்படி செய்தீர்களா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தின் போது எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு மணி நேரம் வரை பேச வாய்ப்பளிக்கப்பட்டதாக பதில் தெரிவித்தார். மேலும் தற்போது இரவு 1 மணிக்கு தான் கொள்கை விளக்கக் குறிப்பே தருவதாக குறிப்பிட்ட அவர், 10 நிமிடத்தில் 3 துறைகளுக்கும் சேர்த்து தங்கமணி அழகாக பேசியுள்ளார் என தெரிவித்தார்.



Next Story