தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி


தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
x

தீபாவளி தினத்தன்று பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் உத்தரவிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு நேற்று அனுமதி அளித்தது.

இந்நிலையில் புதுச்சேரியிலும் தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story