திமுக முப்பெரும் விழா: முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


திமுக முப்பெரும் விழா: முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

திமுக முப்பெரும் விழாவில் முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே பட்டபுதூரில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய கடிதங்களின் தொகுப்பான 'திராவிட மாடல்' புத்தகத்தை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து கட்சியின் முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருதும், கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது. புதுச்சேரி நிர்வாகி சி.பி.திருநாவுக்கரசுவுக்கு பாவேந்தர் விருது, குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.


Next Story