பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை


பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை
x

சேலத்தில் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சேலம்

சேலம் செவ்வாய்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக்ராஜ். இவருக்கும், பூரணி (வயது 30) என்பவருக்கும், கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்தின் போது, 25 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பூரணியின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர்.

இந்நிலையில், வரதட்சணையாக மேலும் ரூ.5 லட்சம் கேட்டு கணவர் வீட்டார் சித்ரவதை செய்வதாக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பூரணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வரதட்சணை கொடுமை செய்ததாக கார்த்திக்ராஜ், அவரது தாயார் சங்குமதி, நாகராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story