அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு: பொதுக்குழு நோக்கி ஈபிஎஸ் - கட்சி தலைமை அலுவலகம் நோக்கி ஓபிஎஸ்...!


அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு: பொதுக்குழு நோக்கி ஈபிஎஸ் - கட்சி தலைமை அலுவலகம் நோக்கி ஓபிஎஸ்...!
x

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகம் நோக்கி ஓ.பன்னீர் செல்வம் சென்றுகொண்டிருக்கிறார்.

சென்னை,

சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வானகரம் நோக்கி எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தேர்தல் பிரசார வாகனத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் நோக்கி பயணித்து வருகிறார்.

இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி பயணித்து வருகிறார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகம் நோக்கி ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பயணித்து வருகிறார்.

ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்பட நூற்றுக்கணக்கானோருடன் அதிமுக கட்சி தலைமை அலுவலகம் நோக்கி பயணித்து வருகிறனர்.

ஈபிஎஸ் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அரங்கு நோக்கியும், ஓபிஎஸ் அதிமுக தலைமை கழகம் நோக்கியும் பயணித்து வரும் சம்பவம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story