லட்டு எடு கொண்டாடு...! 150 கிலோ லட்டு...! எம்.ஜி.ஆராகவே மாறிய எடப்பாடி பழனிசாமி!


லட்டு எடு கொண்டாடு...! 150 கிலோ லட்டு...! எம்.ஜி.ஆராகவே மாறிய எடப்பாடி பழனிசாமி!
x

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னை

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வெளியானது.

அந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்" என அறிவித்த ஐகோர்ட்டு பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க நீதிபதி குமரேஷ்பாபு அனுமதி அளித்தார்.

இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுக்கபட்ட நிலையில், அதனை கொண்டாடும் விதமாக, தலைமை அலுவலகத்துக்கு 150 கிலோ லட்டை அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டு வந்தனர்.

எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் தனது பயோவை அதிமுக பொதுச்செயலாளர் என மாற்றினார்.

பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி,.ஆர்.பாணியில் தொப்பி கண்ணாடி அணிவித்து தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.


Next Story