சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசம் செய்த யானை: பொதுமக்கள் அச்சம் - பரபரப்பு சம்பவம்


சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசம் செய்த யானை: பொதுமக்கள் அச்சம் - பரபரப்பு சம்பவம்
x

வேலூர் அருகே யானை ஒன்று சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைச்சேரி பகுதியில் ஒற்றைக் காட்டுயானை சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசம் செய்ததாக பொது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து பேரனாம்பட்டு மலைப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்திய காவல் துறையினர், 4 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், அடுப்பு மற்றும் மூலப்பொருட்களை அழித்தனர்.

மேலும், சாராயம்காய்ச்சிவிட்டு தப்பி ஓடிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story