ஈரோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை - முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள்..!


ஈரோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை - முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள்..!
x

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 5 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

தேர்தல் நிலவரம் குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அதன் எதிரொலியாக இந்த வெற்றியை காண முடிகிறது. இந்த வெற்றியின் பெரும் பங்கு முதல் அமைச்சரையே சாரும் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story