"கோவில் திருவிழாக்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை கடைபிடிக்கப்படும்" - அமைச்சர் சேகர்பாபு உறுதி


கோவில் திருவிழாக்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை கடைபிடிக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு உறுதி
x

கோவில் திருவிழாக்களின் போது விபத்துகள் நடைபெறாமல் இருக்க கூடுதல் முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வரும் காலங்களில் கோவில் திருவிழாக்களின் போது விபத்துகள் நடைபெறாமல் இருக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.


Next Story