விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 30-ந்தேதி நடக்கிறது


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 30-ந்தேதி நடக்கிறது
x

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்கிழமை) மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story