கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்


கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
x

கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின்கீழ் சமர்ச்சீர் பாசனம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும், தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் பகவதிபாளையம் பகுதியில் கடந்த 22-ந்தேதி முதல் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெள்ளக்கோயில், காங்கேயம் பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று திடீரென கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.




Next Story