உணவகங்களில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


உணவகங்களில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

உணவகங்களில் தரமற்ற உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் அதன் முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் அளவிலான குட்கா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15,236 உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1,572 உணவகங்களில் தரமற்ற உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story