தீமிதி திருவிழா


தீமிதி திருவிழா
x

கல்வாய் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், கல்வாய் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.இதில் கல்வாய் உட்பட சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்துக்கொண்டு தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். தீமிதி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்வாய் கிராம மக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story