சென்னையில் கனமழை: பெங்களூருக்கு திரும்பிய விமானங்கள்


சென்னையில் கனமழை: பெங்களூருக்கு திரும்பிய விமானங்கள்
x

சென்னை புறநகர் பகுதியில் இரவு 8 மணியில் இருந்து இடி மின்னலுடன் மழை பெய்ததால் துபாய், பக்ரைன், லக்னோ விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

ஆலந்தூர்:

சென்னை புறநகர் பகுதியில் இரவு 8 மணியில் இருந்து இடி மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் ஓரளவு பாதிக்கப்பட்டது.

துபாயில் இருந்து இரவு 8.30 மணிக்கு சென்னை வந்த பயணிகள் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதுப்போல் இரவு 8.35 மணிக்கு லக்னோவில் இருந்து வந்த விமானமும் இரவு 8.50 மணிக்கு பக்ரைனில் இருந்து வந்த விமானமும் மழையால் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

அதை போல் பெங்களூரு, மும்பை, கோவா ஆகிய விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானிலே வட்டமடித்துக் கொண்டு இருந்தன.

மேலும் சென்னையில் இருந்து திருச்சி, அபுதாபி, டெல்லி, மும்பை, கோவை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, செல்ல வேண்டிய 10 விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றன.

மழை ஓய்ந்தது வானிலை சீரானதும் விமான சேவைகள் வழக்கம் போல் இயங்கப்படும். பெங்களூருக்கு சென்ற விமானமும் சென்னைக்கு திரும்பி வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story