அம்மன் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு


அம்மன் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு
x

அம்மன் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு நடந்தது.

கரூர்

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்மன் கோவில் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story