கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் - வெளியே குதித்த ஓட்டுநர் உயிரிழப்பு!


கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் -  வெளியே குதித்த ஓட்டுநர் உயிரிழப்பு!
x

மதுரை அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் அதனை ஓட்டி வந்த ஓட்டுநர் திடீரென்று பஸ்சில் இருந்து குதித்து உயிரிழந்தார்.

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தங்கபாண்டியன் எனும் 43 வயது நபர், அரசு பஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் இன்று மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ்சை இயக்கி வந்துள்ளார். பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

அப்போது கொண்டமநாயக்கன்பட்டி எனும் ஊர் அருகே ஒரு பாலத்தை கடக்கும்போது பஸ் நிலை தடுமாறி உள்ளது. கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்த ஓட்டுநர் தங்கபாண்டியன் திடீரென பஸ்சில் இருந்து வெளியே குதித்து விட்டார். இதில் தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

நல்வாய்ப்பாக பஸ்ஸானது அருகில் உள்ள முள்வேலி, மரம் ஆகிவற்றின் மீது மோதி நின்றது. அதன் காரணமாக பஸ்சில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு எந்த வித பெரிய அடியும் காயமும் ஏற்படவில்லை. இதனை அடுத்து நடத்துனர் வினோத்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story