அரூர் பகுதியில் கனமழை


அரூர் பகுதியில் கனமழை
x
தினத்தந்தி 18 Sep 2023 7:30 PM GMT (Updated: 18 Sep 2023 7:31 PM GMT)

அரூர் பகுதியில் கனமழை பெய்தது.

தர்மபுரி

அரூர்:

அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் திடீரென கனமழை பெய்தது. இதனால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. அரூர் பகுதியில் பெய்த கனமழையால் வேப்பம்பட்டியில் உள்ள தடுப்பணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story