அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை


அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
x

அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

அரியலூர்

அரியலூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. பகல் முழுவதும் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தினமும் மாலையில் மழை பெய்து வருவதால் இரவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. ஆனால், மாலையில் அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மாலை 5.40 மணியளவில் பெய்யத்தொடங்கிய இந்த கனமழையானது சுமார் அரை மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் பலர் மழையில் நனைந்தவாறு சாலையில் சென்றனர். இந்த மழையால் நிலவிய குளிர்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

1 More update

Next Story