மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை... பரிதவிக்கும் மக்கள்


மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை... பரிதவிக்கும் மக்கள்
x

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தென்காசி,

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தலையணை அருவி, நரிப்பாறை, தீர்த்தப் பாறை, ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

இங்குள்ள ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் சென்றுகொண்டிருப்பதால் பொதுமக்களும் வனத் துறையினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்துவருவதால், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குமரி ஆற்றில் பெய்த மழையால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, தரைப்பாலம்வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தின் காரணமாக போக்குவரத்து துண்டுக்கப்பட்டு உள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.


Next Story