மனைவியை தாக்கிய கணவர் கைது


மனைவியை தாக்கிய கணவர் கைது
x

மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள சலுப்பை காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 36). இவருடைய மனைவி சுபா(29). இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுரேஷ், சுபாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் சுரேஷ் மற்றும் அவரது தம்பி அம்பிகாபதி ஆகியோர் சேர்ந்து சுபாவை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சுபா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து சுபா கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அம்பிகாபதியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story