"அறிக்கையை படித்துவிட்டு பதில் சொல்கிறேன்'' முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி


அறிக்கையை படித்துவிட்டு பதில் சொல்கிறேன் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி
x

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அளித்த அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அளித்த அறிக்கையில், சசிகலா, முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக இருந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட சிலர் மீது சந்தேகம் இருப்பதாக பரிந்துரைத்து இருந்தார்.

அந்த விசாரணை அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பாக சட்டசபைக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.விடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''அறிக்கையை முழுவதுமாக படித்துவிட்டு பதில் சொல்கிறேன்'' என்று பதில் அளித்தார்.


Next Story