தக்கலையில்டாஸ்மாக் கடையில் ஊழியர் திடீர் சாவு


தக்கலையில்டாஸ்மாக் கடையில் ஊழியர் திடீர் சாவு
x

தக்கலையில் டாஸ்மாக் கடையில் ஊழியர் திடீர் சாவு

கன்னியாகுமரி

தக்கலை,

திருவட்டார் அருகே உள்ள மாத்தூர், தாணிவிளையை சேர்ந்தவர் பாபு (வயது 53). இவர் தக்கலை பஸ்நிலையம் முன்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று பணிக்கு வந்த பாபு மதியம் சாப்பிட்டு விட்டு கடையின் ஒரு பகுதியில் படுத்து ஓய்வு எடுத்தார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் எழும்பவில்லை. இதனால், சக ஊழியர்கள் அவரை எழுப்ப சென்ற போது அவர் அசைவின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாபுவை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தக்கலை போலீசுக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் -இன்ஸ்பெக்டர் பாண்டியன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பாபுவுக்கு வலிப்பு நோய் இருந்ததாக உறவினர்கள் கூறினர். தொடர்ந்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாபுவுக்கு ராஜேஸ்வரி (48) என்ற மனைவியும், பிராங்கிளின் (27), பிரைட் (25) என்ற மகன்களும், அபினயா (20) என்ற மகளும் உள்ளனர்.


Next Story