தஞ்சாவூரில் மாணவர்கள் கண்களை கட்டிக் கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை


தஞ்சாவூரில் மாணவர்கள் கண்களை கட்டிக் கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
x

சிலம்பம் சுற்றிக் கொண்டே 4 மாணவர்கள் 2 மணி நேரம் சைக்கிளில் சென்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். 14 மாணவ, மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு சுருள் வாள் சுற்றினர். அதில் 9 வயதான வந்தனா என்ற மாற்றுத்திறனாளி மாணவியும் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.

அதே போல் 4 மாணவர்கள் சிலம்பம் சுற்றிக் கொண்டே 2 மணி நேரம் சைக்கிளில் சென்றனர். இந்த மாணவர்கள் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். அவர்களின் சாதனைக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



Next Story