தஞ்சாவூரில் மாணவர்கள் கண்களை கட்டிக் கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை

சிலம்பம் சுற்றிக் கொண்டே 4 மாணவர்கள் 2 மணி நேரம் சைக்கிளில் சென்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். 14 மாணவ, மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு சுருள் வாள் சுற்றினர். அதில் 9 வயதான வந்தனா என்ற மாற்றுத்திறனாளி மாணவியும் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.
அதே போல் 4 மாணவர்கள் சிலம்பம் சுற்றிக் கொண்டே 2 மணி நேரம் சைக்கிளில் சென்றனர். இந்த மாணவர்கள் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். அவர்களின் சாதனைக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





