தேனாம்பேட்டையில் குடும்பத்தகராறில் மண்எண்ணெய் ஊற்றி இளம்பெண் தீக்குளிப்பு - காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்


தேனாம்பேட்டையில் குடும்பத்தகராறில் மண்எண்ணெய் ஊற்றி இளம்பெண் தீக்குளிப்பு - காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
x

தேனாம்பேட்டையில் குடும்பத்தகராறில் மண்எண்ணெய் ஊற்றி இளம்பெண் தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் சாலையை சேர்ந்தவர் ஹரி (வயது 37). ஓட்டல் ஊழியரான இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு லீலாவதி (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் இரவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குடும்பத்தகராறாக மாறியுள்ளது. இதனால் விரக்தியடைந்த மனைவி லீலாவதி, திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஹரி, எதையும் யோசிக்காமல் அவரை நெருங்கி காப்பாற்ற முயன்றார். இதனால் அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story