சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்


சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்
x

வீரர், வீராங்கனைகளுக்கான காசோலை மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 160 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 2 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், 76 பயிற்றுனர்களுக்கான பணி நியமன ஆணைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இதன் அடையாளமாக 8 வீரர், வீராங்கனைகளுக்கும், 8 பயிற்றுனர்களுக்கும் காசோலை, பணி நியமன ஆணை மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story