சென்னையில் வருமான வரித்துறை சோதனை..!


சென்னையில் வருமான வரித்துறை சோதனை..!
x

சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னை கே.கே. நகரில் வசித்து வருபவர் நீலகண்டன். இவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கே.கே. நகரில் உள்ள அவரது வீடு மற்றும் ஜவுளி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நுங்கம்பாக்கம், வேப்பேரி, கோபாலபுரம், பட்டாளம் ஆகிய இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஜவுளி நிறுவனம் முறையாக வருமான வரி கட்டவில்லை என்கிற புகாரின்பேரிலும், தொழில் அதிபர்கள் மீதான புகாரின் பேரிலும் சென்னையில் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனை முடிவில் தான் வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்கள் தெரிய வரும். ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது. பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட இடங்களிலும் நீலகண்டன் ஜவுளி தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.


Next Story