திருக்கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு உத்தரவு


திருக்கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 3 Nov 2023 2:29 AM GMT (Updated: 3 Nov 2023 4:32 AM GMT)

ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு, அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு, அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி 46% ஆக வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயம் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story