நாகையில் குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை கமாண்டர் ஆய்வு


நாகையில் குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை கமாண்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Oct 2022 6:59 AM GMT (Updated: 27 Oct 2022 7:00 AM GMT)

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டுதுளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா ஆய்வு செய்தார்.

நாகை,

காரைக்கால் பகுதியில் இருந்து விசைப்படகு ஒன்றில் மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்கள் கோடியக்கரை அருகே உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சந்தேகப்படும்படியான படகு என நினைத்து மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் அந்த படகில் இருந்த தமிழக மீனவர் வீரவேல் என்பவர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீதமுள்ள 9 மீனவர்களும் படகுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடைபெற்று வருகின்றது.

இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் படகுகளில் பல்வேறு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சேதம் அடைந்துள்ளது. இந்த விசைப்படகு நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டுதுளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா ஆய்வு செய்தார்.

இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தால் விசைப்படகில் குண்டுகளால் ஏற்பட்ட 47 துளைகள் கண்டறியப்பட்டுள்ளன. நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 9 மீனவர்களிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, குண்டடிப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவேலிடம் நேரில் விசாரணை நடத்த கடற்படை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


Next Story