உள் ஒப்பந்தம் வழங்கிய விவகாரம்; மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு


உள் ஒப்பந்தம் வழங்கிய விவகாரம்; மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
x

மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு விநியோகம் செய்யும் உள் ஒப்பந்தம் வழங்கிய மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக 14 ஆயிரத்து 614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்புடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் செய்திருந்தது.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கு தரம் குறைந்த பொருட்களை சப்ளை செய்த நிறுவனத்திற்கு தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்பு உள் ஒப்பந்தம் வழங்கியதாகவும், மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story