"பிரதமரை திருப்திப்படுத்த 10% இட ஒதுக்கீடு குறித்து ஜெயக்குமார் அறிக்கை" - ஆர்.எஸ் பாரதி பேட்டி


பிரதமரை திருப்திப்படுத்த 10% இட ஒதுக்கீடு குறித்து ஜெயக்குமார் அறிக்கை - ஆர்.எஸ் பாரதி பேட்டி
x

பிரதமர் மோடியை திருப்திப்படுத்த 10% இட ஒதுக்கீடு குறித்து ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியதாவது:-

இந்தியா முழுவதும் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு கிடைப்பதற்கு திமுகவே காரணம். 10% இடஒதுக்கீடு தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சிகள் தங்கள் கருத்தை முன்வைக்கலாம். ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது அண்ணாவின் கருத்து, அதன் அடிப்படையிலேயே அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

முந்தைய ஆட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி 10% இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்க வேண்டும். பிரதமர் மோடியை திருப்திப்படுத்தவே 10% இடஒதுக்கீடு குறித்து ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மாரு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது மத்திய அரசு கொண்டு வந்த பல திட்டங்களை திமுக தடுத்துள்ளது. திமுகவிற்கு கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. இடஒதுக்கீட்டுக்காகவே உருவாக்கப்பட்டது திராவிட இயக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story