கச்சத்தீவு விவகாரம்: தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் - ப.சிதம்பரம்


கச்சத்தீவு விவகாரம்: தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 2 April 2024 12:40 PM GMT (Updated: 2 April 2024 12:52 PM GMT)

உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிடும் பா ஜ க தலைவர்களுக்கு தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை போலத் தெரிகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்று 27-1-2015 அன்று இந்திய அரசு தந்த கடிதம் தெளிவுபடுத்தியள்ளது. அன்று பிரதமராக இருந்தவர் மோடி .அன்று வெளியறவுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர்.

அந்த 27-1-2015 ஆம் நாள் கடிதத்தைப் பற்றிக் கேட்டால், பா ஜ க தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்? கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான காட்டமான அறிக்கைகளை வெளியிடும் பா ஜ க தலைவர்களுக்கு இலங்கையில் வாழும் 25 லட்சம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் 10 லட்சம் இந்தியத் தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை போலத் தெரிகிறதுஉங்கள் காட்டத்தை இலங்கையின் மீது காட்டி 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி் விடாதீர்கள். என தெரிவித்துள்ளார்.


Next Story