பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா


பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
x

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

சென்னை

சென்னையை அடுத்த புழலில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு சென்னை வாழ் நாடார்கள் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து தலைமை தாங்கினார். காமராஜர் சிலைக்கும், அவரது திருவுருவ படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கல்லூரி செயலாளரும், பள்ளி நிர்வாக இயக்குனருமான ஏ.என்.எஸ்.கோவிந்தசாமி வரவேற்றார். சங்க பொருளாளர் கே.வி.பி. பூமிநாதன் முன்னிலை வகித்தார். சங்க துணை தலைவர் கரூ.சின்னதுரை, கல்வி குழு உறுப்பினர் ஜி.நாகராஜன், கல்லூரி முதல்வர் டாக்டர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும், ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர். விழாவில் ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பள்ளி துணை முதல்வர் ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story