காஞ்சிபுரம்: முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் 145 சவரன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை...!


காஞ்சிபுரம்: முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் 145 சவரன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை...!
x

காஞ்சிபுரம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டின் கதவை உடைத்து 145 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து உள்ளனர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய நத்தம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவர் முன்னாள் பாஞ்சாயத்து தலைவர். நேற்று அமாவாசை என்பதால் கடந்த 25-ம் தேதி தனது குடும்பத்துடன் கணபதி ராமேசுவரம் கோவிலுக்கு சென்று உள்ளார்.

ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசம் செய்து விட்டு நேற்று மாலை கணபதி தனது குடுபத்துடன் வீடு திரும்பினார். வீட்டிற்கு அவர்கள் வந்ததும் வீட்டின் முன்பக்க கதவு சேதம் அடைந்து இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணபதி விரைந்து சென்று வீட்டிற்குள் சென்று பார்த்து உள்ளார்.

அப்போது பீரோவில் இருந்த 145 சவரன் தங்கம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 லட்சம் பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து கணபதி கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் கதவை உடைத்து 145 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story