புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் கன்னியாகுமரி; களைகட்டிய சுற்றுலா தளங்கள்


புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் கன்னியாகுமரி; களைகட்டிய சுற்றுலா தளங்கள்
x

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களால் கன்னியாகுமரி தற்போது களைகட்டியுள்ளது.

கன்னியாகுமரி,

தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் விடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரோடு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் கடந்த ஆண்டுகளாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்க கன்னியாகுமரி கோலாகலமாக தயாராகி வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்து வருகின்றனர். அங்குள்ள ஓட்டல்களில் பெரும்பாலான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களால் கன்னியாகுமரி தற்போது களைகட்டியுள்ளது. புத்தாண்டு விடுமுறையையொட்டி அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story