கார்த்திகை தீபத்திருவிழா: கும்பகோணம் கோட்டம் சார்பில் 695 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


கார்த்திகை தீபத்திருவிழா: கும்பகோணம் கோட்டம் சார்பில் 695 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 25 Nov 2023 12:12 AM GMT (Updated: 25 Nov 2023 12:15 AM GMT)

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. இதேபோல் 27-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது. இந்த விழாக்களை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் 27-ந் தேதி (திங்கட்கிழமை) வரை கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, கரூர், காரைக்குடி, இராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் மேற்கண்ட நாட்களில் 695 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக மினிபஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மற்றும் பக்தர்கள் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story