கல்லூரி மாணவி கடத்தல்


கல்லூரி மாணவி கடத்தல்
x

கல்லூரி மாணவி கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெண்ணைவலம் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அந்த மாணவியை திடீரென காணவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை பாவந்தூர் கிராமத்தை சேர்ந்த நாராயணன் மகன் கட்டிட தொழிலாளியான விஷ்ணு (21) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற விஷ்ணுவையும் தேடி வருகின்றனர்.


Next Story