பள்ளி மாணவி கடத்தல்


பள்ளி மாணவி கடத்தல்
x

பள்ளி மாணவியை கடத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள காணைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் மகன் ஜனார்த்தனன் (வயது 24). இவர் ஆயந்தூரை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற ஜனார்த்தனனையும் தேடி வருகின்றனர்.


Next Story