முதல்-அமைச்சரை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்ட கிஷோர் கே.சாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!


முதல்-அமைச்சரை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்ட கிஷோர் கே.சாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்ட கிஷோர் கே.சாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்ட கிஷோர் கே.சாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மழை வெள்ள பாதிப்பின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை விமர்சிக்கும் வகையில், பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பினர்.

இருப்பினும் விசாரணைக்கு ஆஜராகாத கிஷோர் கே.சாமி, முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு கோரட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


Next Story