வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் வக்கீல்கள் சங்கம் சார்பில் சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வக்கீல் சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சூர்யா என்பவர் வக்கீல்கள் அளிக்கும் புகார்களை உடனே விசாரிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி அதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வக்கீல் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





