தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 22 Dec 2023 1:56 AM GMT (Updated: 22 Dec 2023 3:12 AM GMT)

வெள்ளநீர் வடியாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது.

தற்போது, மழை நின்று வெள்ளநீர் வடிந்து வருகிறது. ஆனால், பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடியாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளை திறப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ளலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.


Next Story