காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்


காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்
x

காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

லோக் அதாலத்

காஞ்சீபுரம் வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக் அதாலத் நடைபெற்றது. இதனை மாவட்ட நீதிபதி செம்மல் தொடக்கி வைத்து பல்வேறு பயனாளிகளுக்கு வழக்குகளுக்கான இழப்பீட்டுத்தொகைக்கான காசோலையை வழங்கினார். தொடக்க நிகழ்வுக்கு தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் கே.எஸ்.அருண்சபாபதி, கூடுதல் சார்பு நீதிபதி திருஞான சம்பந்தம், நீதிபதி வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

723 வழக்குகளுக்கு

கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம் வரவேற்று பேசினார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், அசல் வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளாக மொத்தம் 2 ஆயிரத்து 775 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் ஒரே நாளில் 723 வழக்குகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 கோடியே 66 லட்சத்து 18 ஆயிரத்து 919 வழங்கவும் தீர்வு காணப்பட்டது.

தொடக்க நிகழ்வில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story