லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், சதீஷ்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றுக்கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சந்தப்பேட்டை ஆசனூர் சாலையை சேர்ந்த முருகன் (வயது 50) என்பதும், லாட்டரி சீட்டு விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story