பூச்சி அத்திப்பேட்டில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல்; சிறுவன் பலி


பூச்சி அத்திப்பேட்டில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல்; சிறுவன் பலி
x

பூச்சி அத்திப்பேட்டில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் சிறுவன் பலியானான்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சி கள்ளிகுப்பம் காலனியில் வசித்து வந்தவர் சந்துரு (வயது 17). இவர் தனது நண்பர் நரேஷ் (13) என்ற சிறுவனை வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வர பூச்சி அத்திப்பேடு பஜார் வீதிக்கு நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு சென்றார். இந்த நிலையில், பூச்சி அத்திப்பேடு பஜார் வீதி அருகே வாகனம் சென்றபோது, பின்னால் வந்த மினி லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சிறுவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, பாடியநல்லூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நரேஷ் இறந்து விட்டதாக கூறினர். உயிருக்கு போராடி கொண்டிருந்த சந்துருவை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான மினிலாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story