"தென் தமிழகத்திற்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும்" - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை


தென் தமிழகத்திற்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும் - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை
x

விவசாய நிலங்களை அழிக்காத வகையில் தொழிற்சாலைகள் வர வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் டிட்கோ தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், கோவை மாவட்டம் அன்னூரில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் எனவும், விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில், தமிழக பா.ஜ.க. சார்பில் அரசின் அறிவிப்பை வரவேற்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விவசாய நிலங்களை அழிக்காத வகையில் தொழிற்சாலைகள் வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் அரசாணையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் விவசாயிகளுக்கே கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்ட அவர், தென் தமிழகத்திற்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும் என்றும், அங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் எனவும் பா.ஜ.க. வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்தார்.


Next Story