கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!


கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
x
தினத்தந்தி 1 Sept 2022 7:54 AM IST (Updated: 1 Sept 2022 8:11 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் இன்று ஒரு நாள் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாகப்பட்டினம்,

தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில், நாகப்பட்டினம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story