கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் - வானதி சீனிவாசன்


கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் - வானதி சீனிவாசன்
x

தமிழகத்தில் தற்போது கூட்டணிக்குள் இருக்கும் சலசலப்பு விரைவில் சரி செய்யப்படும் என வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை,

பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-

கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும். கூட்டணி பற்றி எங்களது கருத்துகளை கட்சி மேலிடத்திற்கு சொல்வோம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும்.

கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் தற்போது கூட்டணிக்குள் இருக்கும் சலசலப்பு சரி செய்யப்படும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை எல்லா இடத்திலும் சிறப்பாக நடக்கிறது. அனைத்து இடங்களிலும் மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, "எந்த தலைவர் சிலையாக இருந்தாலும் அவமதிப்பதை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளாது. அவமதிப்பதை பா.ஜ.க. ஒரு போதும் ஆதரிக்காது என்றார்.


Next Story