டிரைவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்


டிரைவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கவில்லை - தமிழக அரசு விளக்கம்
x

கோப்புப்படம்

டிரைவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் பரப்பப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழக அரசு அனைத்து வாகன டிரைவர்களுக்கும் நிவாரணத் தொகை ரூ.1,000 வழங்க இருப்பதாகவும், அதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள வி.ஏ.ஓ. அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 நிவாரணத் தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆனால் இதனை தமிழக அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதுபோன்ற அறிவிப்பு எதுவும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை. இது தவறான தகவல் ஆகும் என இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுவதுடன் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுபோன்ற தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story