ஓ.பன்னீர் செல்வம் அறை கதவை உடைத்து திருட்டு! மர்ம நபர்கள் துணிகரம்


ஓ.பன்னீர் செல்வம் அறை கதவை உடைத்து திருட்டு! மர்ம நபர்கள் துணிகரம்
x

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டின் கதவை உடைத்து டிவியை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்தப் பண்ணை வீட்டில் பார்வையாளர்கள் அறை, முக்கிய நபர்களை சந்திக்கும் அறை மற்றும் மேல் மாடியில் ஓ.பன்னீர்செல்வம் ஓய்வு அறை உள்ளன.

இந்நிலையில், நேற்று இரவு பண்ணை வீட்டின் பின்புறம் உள்ள சுவரின் வழியாக ஏறி குதித்த கொள்ளையர்கள், ஓ.பன்னீர்செல்வம் ஓய்வு எடுக்கும் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அந்த அறையில் இருந்த பீரோவை உடைத்து பார்த்ததில் நகை மற்றும் பணம், பொருள் ஏதும் இல்லாததால், 54 இன்ச் டிவியை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பண்ணை வீட்டுக்கு விரைந்து சென்ற பெரியகுளம் தென்கரை போலீசார், வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து, முன்னாள் முதலமைச்சரின் வீட்டின் கதவை உடைத்து டிவியை தூக்கிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story