கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி - சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்வு


கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி - சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்வு
x

தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதையடுத்து பலி எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்தனர். 12 பேரில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார் (வயது 25), சந்தியா (21), ஜீவானந்தம் (50), குடவாசல் பகுதியை சேர்ந்த குணால் (22), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர் (13), சண்முகப்பிரியன் (17), கோகுல் (22), குடவாசல் பகுதியை சேர்ந்த அருண் (23), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (11), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூஜா (11), ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தீ விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த நிவேதா (21), நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் (32) என்பவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக ஒரகடம் போலீசார் தெரிவித்தனர். கியாஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.


Next Story