'மக்களுடன் ஸ்டாலின்' செயலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


மக்களுடன் ஸ்டாலின் செயலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
x

அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியில் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூரில் இன்று தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த செயலியில் தி.மு.க. அரசின் செயல்பாடுகள் மற்றும் ஒவ்வொரு தொகுதியை பற்றிய விரிவான தகவல்கள், அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களும் இந்த செயலியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கள செயல்பாடுகளை இந்த செயலியில் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ரெயில் ரெயில் மூலம் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு சென்றடைந்தார். இன்றைய தினம் மேல்மொனவூரில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகளையும் முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.



Next Story